articles

img

விசாகா எழுச்சி - 1000 உருக்காலையைக் காக்க ஒரு காவியப் போராட்டம்

1950  களில் வட இந்தியாவில் மட்டும் உருக்காலைகள் ஆரம்பிக்கப்பட்டி ருந்தன.  இப்பின்னணியில், தென் னிந்தியாவிலும் உருக்காலைகள் துவங்கப்பட வேண்டும் என்று தென்னிந்திய மக்கள் தங்கள் விருப் பங்களை வெளிப்படுத்தினர். அதன் அடிப்படையில் 1965 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, விசாகப்பட்டினத்தில் உருக்காலை துவங் கப்படும் என்று அறிவித்தார். ஒன்றுபட்ட ஆந்திர மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. காரணம், சாஸ்திரி அவர்களுக்கு பின்னர் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, நிதி நிலையைக் காரணம் காட்டி உருக்காலை அமைக்கும் முடிவினை கை விடுவதாக அறிவித்து விட்டார். உடனடியாகப் போராட் டம் வெடிக்கிறது. 

தெலுங்கு மக்களின் தலைவர் டி.அம்ருத ராவ் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கி றார். மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் வீதிக்கு வருகின்றனர். மாநிலம் முழுக்க மக்கள் வேலை நிறுத்தங்கள், சாலை மறியல் கள் என பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்து கின்றனர். மக்களை அடக்க இராணுவம் வரவழைக்கப் படுகிறது.  தடியடி, துப்பாக்கிச் சூடு என அடக்குமுறை கள் ஏவிவிடப்பட்டன. 9 வயது பாலகன் உள்பட 32 பேர் உயிர் பறிக்கப்படுகிறது. 51 கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் உட்பட 67 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர். இறுதியில் 1971இல் ஒன்றிய அரசு பணிந்து உருக்காலைக்கான இடத்தை தேர்வு செய்தது. 

16,000 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டன. தங்கள் விருப்பம் நிறைவேறப் போகிறது என்று மக்கள் மீண்டும் மகிழ்ச்சியடைந்தனர். அப்பொழுது இன்னமும் தொடர்ச்சியாக போராட வேண்டியிருக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை. ஒன்றிய அரசு கட்டுமானப் பணிகளை துவக்காமல் காலம் தாழ்த்தியது. 1977-இல் இந்திரா காந்தி அரசு தோற்கடிக்கப்பட்டு ஜனதா அரசாங்கம் வந்த பிறகு தான் விசாகா உருக்காலைக் காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமா னப் பணிகளுக்கு என சோவியத் யூனியன் உடன் ஒப் பந்தம் போடப்பட்டு கட்டுமானப் பணி துவக்கப்பட்டது.

1980-90 களில்

ஏறத்தாழ ரூ.1700 கோடி செலவழிக்கப்பட்ட நிலை யில் 1980 களில் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி அரசு விசாகா உருக்காலை திட்டத்தையே கைவிட முடிவு செய்தது. காரணம் இந்தியப் பெருமுதலாளிகள் பெரு மளவு வளர்ந்து தனியார்மயக் கொள்கைகளை வலி யுறுத்தி பொதுத் துறைகளை எல்லாம் தங்களுக்கே தர வேண்டும் என்கிற நிர்பந்தங்களும், சர்வதேசச் சந்தையில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏராளமான உருக்கை கொட்டி வைத்து அதனை இந்தியா வாங்கு மாறு கட்டாயப்படுத்தியதும் சேர்ந்து விசாகா உருக்காலை திட்டத்தையே காவு வாங்கப் பார்த்தது.

அப்பொழுது தேசத்தின் மீது அக்கறை கொண்ட அதிகாரிகள் ஒரு சமரசத் திட்டத்தினை முன் வைக்கி றார்கள். அத்திட்டத்தின்படி விசாகா உருக்காலை ஏற்க னவே திட்டமிட்ட உற்பத்தி அளவை குறைத்துக் கொள்வது; உயர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்யக் கூடாது; அது மட்டுமல்ல, ஒவ்வொரு பொ துத்துறை உருக்காலைகளுக்கும் ஒரு இரும்புத் தாது சுரங்கம் ஒதுக்கப்படும். அப்பொழுது தான் திறந்த சந்தையில் இரும்புத்தாதை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் அந்த உருக்காலைக்கு இருக் காது; உருக்காலை நட்டம் அடையாமல் பாதுகாக்கப் படும். ஆனால், விசாகா உருக்காலைக்கு என ஒதுக் கப்பட்டிருந்த சத்தீஸ்கரில் உள்ள பெயிலாடிலா சுரங்கம் இனி மேல் கிடையாது; போக்குவரத்துக்கு என விசாகா உருக்காலைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக் கும் கங்காவரம் துறைமுகமும் தரப்பட மாட்டாது என்று பல்வேறு நிபந்தனைகளோடு விசாகா உருக்காலை திட்டம் தொடர அனுமதிக்கப்பட்டது. 

மேலும் நிதி ஒதுக்குவதில் கால தாமதம், கடன் பெற அனுமதி வழங்குவதில் கால தாமதம் என பல்வேறு தாக்குதலுக்கு பிறகு இறுதியாக 1992-இல் ரூ.3700 கோடி கடனுடன் தனது உற்பத்தியை துவக்கியது விசாகா உருக்காலை.

பிறந்த உடனே குழந்தைகளை விற்பது போல 1994 லிலேயே விசாகா உருக்காலையைத் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சியினை அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்டது. தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றினை மத்திய அரசாங்கம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 1.5 டன் திறனுடன் உருக்காலை ஒன்றை அந்நிறுவனம் அமைப்பதற்கு அனுமதித்தது. விசாகா உருக்காலை யில் உருக்கப்படும் இரும்புத் தாதுக்கள் எல்லாம் நேரடியாக அந்த தனியார் ஆலைக்குச் சென்று விடும்; அதனை உருக்காக மாற்றி நல்ல லாபத்திற்கு அந்த  தனியார் ஆலை விற்று பலன் பெற்றுக் கொள்வது என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் சாரம். 

இலாபமில்லாத பிற வேலைகளை பொதுத்துறை உருக்காலை செய்து கொள்வது என்கிற முடிவினை எதிர்த்தது சி.ஐ.டி.யு சங்கம். கருத்தரங்குகளையும் உள்ளிருப்புப் போராட்டங்களையும் இடையறாது நடத்தி  வெற்றியும் பெற்றது. விசாகா உருக்காலை கூடு தலாக ஒரு உருக்கும் நிலையத்தினையும் அமைத்துக் கொள்வது என்கிற அனுமதியினையும் பெற்றுத்தந்தது.

2000-2010 காலக்கட்டத்தில்

1999-இல் வாஜ்பாய் அரசாங்கம் பதவியேற்ற பொழுது விசாகா உருக்காலையின் நட்டம் ரூ.4600 கோடியாக உயர்ந்திருந்தது. இதை காரணம் காட்டி விசாகா உருக்காலையை அந்நிய மற்றும் இந்திய நிறு வனங்களுக்கு விற்பதற்கான முயற்சியை செய்தது. அதற்கேற்ற வகையில் உருக்காலையின் கடன் களை மறு கட்டமைப்பு செய்தது. டாடா போன்ற நல்ல முதலாளி/நிறுவனம் வசம் விற்று விடலாம்; அது தொழி லாளிகளுக்கு பலன் கிடைக்கும் என்கிற பிரச்சாரம் செய்யப்பட்டது. சிஐடியு களத்தில் இறங்கி நல்ல/கெட்ட முதலாளி/நிறுவனம் என்று எல்லாம் இல்லை; அவர்களுக்கு இலாபம் ஒன்றே இலக்காக இருக்கும் என்று கூறி தொழிலாளர்களை திரட்டியது. அதில் வெற்றியும் பெற்றது. வாஜ்பாய் அரசின் தனியார் மய முயற்சிகளுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. 

கடையடைப்புப் போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் களத்தில் இறங்கினர்.  பிரபல விடுதலைப் போராட்ட வீரர்கள் பட்டி சேசை யா, பைராகி நாயுடு ஆகியோர் காலவரையற்ற உண் ணாவிரதப் போராட்டத்தினை துவக்கினர். அரசு பணிய மறுத்த பொழுது ஆயிரக்கணக்கான தொழிலாளர்க ளோடும் பொது மக்களோடும் கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் இறங்குவதற்குச் சென்றனர். காவல் துறை தடியடி நடத்தி கைது செய்தது. போராட்டம் தொடர்ந்தது. விசாகப்பட்டினம் நகருக்குள் அன்றைய முதல்வர் சந்திரபாபு அவர்களால் நுழைய முடிய வில்லை. ஹெலிகாப்டர் மூலம் பொதுக் கூட்ட மேடை க்குச் சென்றார். அங்கும் போராடும் தொழிலாளர்க ளை எதிர்கொள்ள நேரிட்டது. இறுதியில் அப்பொழுது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு தனியார்மய முயற்சி கைவிடப்பட்டது.

2004-இல் ஐ.மு.கூ 1 அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவினால் அமைந்தது. அதனால் பலனடைந்த பொதுத்துறை நிறுவனங்களில் விசாகா உருக்கா லையும் ஒன்று. உற்பத்தியை அதிகரித்துக் கொள்வ தற்கு அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் இடதுசாரிகள் மூலம் கோரிக்கை விடுத்தனர். அதன டிப்படையில் 2006-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம்  ஆண்டு வரை தனது உற்பத்தியை 3.4 மில்லியன் டன்னிலிருந்து 6.3 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இதனை தனது சொந்த லாபம் மூலமும் வங்கியிலி ருந்து பெறப்பட்ட கடன் மூலமும் சாதித்தது. தனியார் மய எதிர்ப்புப் போராட்டங்களில் மட்டும் தன் பங்கைச் செலுத்தாமல் உருக்காலையின் வளர்ச்சிக்கும் தங்கள் பங்கினை தொழிலாளிகள் நல்கினர்.

2010 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில்

ஐ.மு.கூ 2 அரசாங்கம் இடதுசாரிகள் ஆதர வில்லாமல் அமைந்தது. எனவே மன்மோகன்சிங் அர சாங்கம் விசாகா உருக்காலை மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்தது. இந்த அரசாங்கம் மூன்று விதமான உத்திகளை கையாண்டது.

நவரத்னா அந்தஸ்து விசாகா உருக்காலைக்கு அளிக்கப்பட்டது. இதனால் ஆயிரம் கோடி வரை அரசின் முன் அனுமதியின்றி தனது விரி வாக்கத் தேவைகளுக்கு உருக்காலை செலவ ளித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு முன் நிபந் தனை விதிக்கப்பட்டது. நவரத்னா அந்தஸ்து தொடர வேண்டும் என்றால் 10 சதவீதப் பங்குகளை விற்க வேண்டும் என்பதே அந்த முன் நிபந்தனை. இத னடிப்படையில் 2012-இல் 10 சதவீதப் பங்குகளை விற்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். பங்கு விற்பனை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

விசாகா உருக்காலையை துண்டு துண்டாக விற்பது. இதனடிப்படையில் விசாகா உருக்கா லையுடன் இணைந்திருந்த அனல் மின் நிலையத்தை யும் காற்றைப் பிரிக்கும் நிலையத்தையும் தனி யார்மயமாக்க முயற்சித்தது. இந்த இரு நிலையங்க ளும் விசாகா உருக்காலைக்கு மிக முக்கியமானது. ஒன்று உருக்காலையின் மின் தேவையை பூர்த்தி செய்யும்; மற்றொன்று உருக்காலைக்கு தேவை யான பல்வேறு வாயுக்களையும் உற்பத்தி செய்து  தரும். இவற்றை தனியார்மயமாக்குவது உருக்காலையின் நிதிச் சுமையினை அதிகரிக்கும். இதில் ஒரு பிரெஞ்சு நிறுவனம் மூலம் காற்றைப் பிரிக்கும் ஆலையை அமைப்பதில் அரசு வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஆலை அமைக்கப்படும் பொழுதே அதில் விபத்து ஏற்பட்டு அந்த ஆலை  ன்னமும் செயல்படவில்லை. ஆனால் உருக்கா லையின் பழைய காற்றைப் பிரிக்கும் ஆலை மூலம் ஆக்சிஜன் இன்னமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜனை விசாகா உருக்காலை தனது பழைய யூனிட் மூலம் உற்பத்தி செய்து தந்தது. ஊரடங்கு காலத்தில் ஆலைக்கு வந்து தொழிலாளர்கள் தங்கள் பங்க ளிப்பினை செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

உருக்காலை வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முடிவுகளை தாமதப்படுத்துவது அல்லது அனுமதி மறுப்பது. சந்தைக்கு தேவையான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி மறுக்கப் பட்டன. இதனால் விசாகா உருக்காலைக்கு வர வேண்டிய இலாபம் தடுக்கப்பட்டது.

மோடி ஆட்சி தொடுக்கும் தாக்குதல்களும் போராட்ட உத்திகளும் வடிவங்களும்

மோடி ஆட்சி வந்ததற்கு பிறகு விசாகா உருக்கா லைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த கங்காவரம் துறை முகம் முழுக்க அதானியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. உண்மையில் இந்த துறைமுகமே உருக்காலைக்கு சொந்தமான 2800 ஏக்கரில் தான் கட்டப்பட்டுள்ளது. இத்துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு தான் அதிக கட்டணங்களை செலுத்தி வருகிறது விசாகா உருக்காலை. அது மட்டுமல்ல, நகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து  அதானியின் துறைமுகத்திற்கு விலக்கு; விசாகா உருக்காலைக்கு விலக்கு இல்லை. இது ஒன்றிய அரசின் அணுகுமுறை.

இப்பின்னணியில் தான் 2019-இல் ஒன்றிய அரசு ஒரு திட்டத்தினை முன் மொழிந்தது. அதன்படி தென் கொரிய போஸ்கோ நிறுவனம் விசாகா உருக்காலை யில் 3000 ஏக்கரில் ஒரு சிறப்பு தொழிற்சாலையை அமைக்கும்; அதில் விசாகா உருக்காலைக்கு சிறு பங்கு இருக்கும். கொல்லைப்புற வழியாக போஸ்கோ வருவதை அறிந்து கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். தொழிலாளர்களின் இப் போராட்டத்திற்கு பாஜகவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்தன. போஸ்கோவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. 

இதற்கிடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்த ஒரு இரும்புத் தாது சுரங்கத்தை விசாகா உருக்காலை க்கு என ஒதுக்கி இருந்தது. போஸ்கோவிற்கு தாரை வார்ப்பது தடைப்பட்ட நிலையில் அந்த சுரங்க ஒதுக் கீட்டையும் ஒன்றிய அரசாங்கம் ரத்து செய்துவிட்டது.

இதற்குப் பிறகு, ஜனவரி 27, 2021 அன்று நிதி அமைச்சகத்தின் உபகுழு விசாகா உருக்காலையின் பங்குகளை 100 சதவீதம் விற்பது எனும் முடிவினை எடுக்கிறது. உடனடியாக விசாகா உருக்காலையைச் சார்ந்த நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டக் குழு ஒன்றினை அமைக்கின்றனர். போராட்டத்தை எவ்வித தாமதமுமின்றி துவங்குவது என்று முடிவாகி, பிப்ரவரி 12, 2021 அன்று உண்ணாவிரதப் போராட்டம் விசாகப்பட்டினம் நகரில் இரண்டு மையங்களில் துவங்கப்படுகிறது. ஒன்று உருக்காலையின் வாசல் முன்பாக.  மற்றொன்று நகரின் மையப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில். பிப்ரவரி 12 அன்று துவங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று வரை நீடிக்கிறது.  நவம்பர் 9, 2023 தினமான இன்று 1001 வது நாளில் போராட்டம் அடி எடுத்து வைக்கிறது. 

1000 நாட்களாக மழை, வெயில், குளிர் என்று எதையும் பார்க்காமல் தொடர்ச்சியாக உண்ணாவிர தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணா விரதத்தில்  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சார்ந்த பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், இளை ஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் தினந்தோறும் கலந்து கொள்கின்றனர். இரு முறை ஒரு நாள் வேலை நிறுத்தம், ஒரு முறை இரு நாள் வேலைநிறுத்தம், இரு முறை சாலை மறியல் என தொடர்ச்சியாக விசாகா உருக்காலை தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். தாங்கள் போராடுவது மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து விசாகா உருக்காலை போராட்டக்குழு உருவாக்கும் வடிவங்களும் உத்திகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டம்.

பி.எம்.எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் தேசிய தலைவர்களும் பங்கேற்ற எண்ணற்ற வாயிற் கூட்டங்கள்.

விசாகப்பட்டின கடற்கரையில் தில்லி விவசாயிகள் போராட்டத்தை வழி நடத்திய கிசான் சம்யுக்தா மோர்ச்சா தலைவர்களான ராகேஷ் திகாயத், அசோக் தாவ்லே உள்ளிட்டவர்களும் விவசாயி களும் தொழிலாளர்களும் பங்கேற்ற பிரம்மாண்ட மான பொதுக்கூட்டம்

விசாகப்பட்டினம் 20000க்கும் மேற்பட்ட பொதுத் துறை தொழிலாளர்கள் உள்ள நகரம். இவர்களும் உள்ளூர் மக்களும் பங்கேற்கிற பல்வேறு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.

10 கி.மீ நீளத்திற்கு 10000 மக்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி

தனியார்மயத்திற்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம். இந்த இயக்கத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர்களின் சிறப்பான பங்கேற்பு

விசாகா உருக்காலைக்கு என ஒதுக்கப்பட்ட கங்காவரம் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக, ஆகஸ்ட் 9  வெள்ளை யனே வெளியேறு’ தினத்தன்று ‘அதானியே வெளி யேறு’ இயக்கம்.

விசாகா உருக்காலை தனியார்மயத்திற்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகள்.

பிரதமர் மோடி விசாகப்பட்டினத்திற்கு வருகை புரிந்த நவம்பர் 11, 2022 தினத்தன்று 10000 விசாகா உருக்காலை தொழிலாளர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம்.

மாநிலம் முழுக்க இருசக்கர வாகன பேரணி.

இத்தகு தீவிரமான, உறுதியான போராட்டத்தின் விளைவாக பங்கு விற்பனைகளுக்கு தேவையான விசாகா உருக்காலை சொத்து குறித்த மதிப்பீட்டு அறிக்கையினை கூட தயாரிக்க இயலவில்லை. காரணம் இதற்கு என அமைக்கப்பட்ட குழு விசாகா ஆலைக்குள் நுழைய விடாமல் தொழிலாளர்களால் தடுக்கப்பட்டனர். அதனால் தற்பொழுது வரை விசாகா உருக்காலையின் 1சதவீதப் பங்கு கூட விற்கப்பட வில்லை. இதற்குக் காரணம் விசாகா உருக்காலை தொழிலாளர்களின் உறுதிமிக்க தொடர்ச்சியான நீடித்த போராட்டமே. தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஒரு போராட்ட வடிவத்தை, உத்தியை உரு வாக்கி நம் தேசத்திற்கு அளித்துள்ள விசாகா உருக்காலை தொழிலாளர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும். கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மதுரை மாநகர்  மாவட்ட செயற்குழு உறுப்பின